Monday 12 December 2011

இன்றைய கிறிஸ்தவ ஊழியங்களில் விபசாரம்


இன்றைய கிறிஸ்தவ ஊழியங்களில் விபசாரம்

by Bible Prophecy on Sunday, 13 November 2011 at 05:33
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே,

இன்றைய கிறிஸ்தவ ஊழியங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேதனையான சம்வங்கள் பலவற்றை கேள்விப்பட்டு கவனமாக விசாரித்து மிகவும் கண்ணீரோடுதான் இந்த கடிதத்தை எழுதுகின்றேன். 

குறிப்பாக இன்றைய சூழலில் கிறிஸ்தவ ஊழியங்களில் விபசாரம் பெருகி போய்விட்டதை நாம் மறுக்க முடியாது. சாதாரண சிறிய சபை பாஸ்டர்கள் முதல் பெரிய சபை பாஸ்டர்கள் வரையிலும், சாதாரண எவாஞசலிஸ்டுகள் முதல் பெரிய பெரிய மிஷனரி சங்கத்தலைவர்கள் வரையிலும,; சாதாரண சுவிசேஷ ஊழியர் முதல் பெரிய பெரிய தீர்க்கதரிசிகள் வரையிலும் தேவனுடைய ஊழியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஊழியர்களில் மிகப்பெரிய சதவிகிதத்தினர் விபசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே ஊழியங்கள் என்ற பெயரில் அட்டூழியங்கள் செய்துகொண்டும் அதேவேளையில் வெளியிலே ஊழியக்காரர்களின் வேஷம் தரித்துக்கொண்டும் திரிகின்றனர்.

இவர்கள் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும்போது மட்டும்; ஒரு சில ஊழியர்கள் மட்டும் பாதிக்கப்பட்ட சபையாரிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும், ஒரு சிலர் மறைமுகமாக  மன்னிப்பு கோருவதும் நடைபெறுகிறது. அதுவரையில் ஒருபுறம் ஊழியமும் இன்னொருபுறம் அட்டூழியமும் செய்துகொண்டு இருக்கின்றனர். இதில் FMPB ஸ்தாபகர்களில் ஒருவரான மறைந்துபோன P.சாம் ஐயா அவர்களும் IEM ஸ்தாபகரான மறைந்துபோன தியோடர் வில்லியம்ஸ் ஐயா அவர்களும் விபசார விஷயத்தில் மாட்டிக்கொண்டபின் விசுவாசிகளிடத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியவர்கள். ஆனால் ஒருசிலர் மாத்திரமே தாங்கள் செய்த அட்டூழியங்களை தாங்களாகவே உணர்ந்து பிறருடைய வற்புறுத்தல்  இல்லாமலேயே தாங்களாகவே ஊழியங்களை விட்டு விலகிவிடுகின்றனர். விபசாரத்தில் விழுந்துபோன ஊழியர்கள் பலர் தாவீது பத்சேபாளின் காரியத்தை சொல்லியே தங்கள் காரியத்தை நியாயப்படுத்தி மழுப்பிவிடுகின்றனர். 

இதனால்தான் முன்மாதிரியாக வாழ வேண்டிய பாஸ்டர்கள் மற்றும்  ஊழியக்காரர்கள் பலருடைய குடும்பங்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ்வதும், டைவர்டஸ் வாங்கிவிட்டு தங்கள் மனம்போனபோக்கில் வாழ்வதும் மடடுமல்லாமல் துணிகரமாக விபசார காரியங்களில் ஈடுபடுவதும் சர்வசாதாரணமாக இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஒரே கணவன் ஒரே மனைவி (ஒருவனுக்கு ஒருத்தி) என்கின்ற கலாச்சாரம் பல ஊழியக்காரர்களுடைய குடும்பங்களிலேயே இன்றைக்கு இல்லை என்பதுதான் மிகப்பொரிய வேதனையான காரியங்கள்.  தேவனை அறியாத புறஜாதிகளிடத்தில் கூட இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் இன்றைக்கும் இருந்து வருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. 70 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களகூட விபசாரத்தில் சிக்கி அவர்களுடைய பெயர்களும்கூட இந்தவிசயத்தில் நாற்றமெடுக்கின்றதுதான் மிகவும் வேதனையான காரியம்.

சமீபத்தில் ஒரு முன்னணி மிஷனரி ஸ்தாபன தலைவரும் ஸ்தாபகருமான ஊழியரைப்பற்றி நான் கேள்விப்பட்ட விஷயம் என்னை மிகவும் பாதித்தது. காரணம், எனக்கு மிஷனரி ஊழியங்களில் தாக்கம் ஏற்பட அவருடைய பிரசங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. என்னுடைய பிள்ளைகளும் மிஷனரி ஊழியங்களில் ஈடுபடவேண்டும் என்கின்ற நோக்கத்தில், தைரியமாக யோவான்ஸ்நானகனைப்போல பிரசங்கிக்கின்ற அந்த ஊழியரின் பெயரைதான் என் இளைய மகனுக்கு கூட வைத்தேன். பல ஆலோசனை புத்தகங்களை எழுதியிருக்கின்ற அந்த ஊழியர் விபசார காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற செய்தியை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்போது என் உள்ளத்தில் எழுந்த கேள்வி 'ஊழியங்களில் கடைசிவரை யார்தான் உண்மையாய் நிலை நிற்க முடியும்?' வேதத்தில் யோசேப்பு யோசுவா தானியேல் போன்ற தேவ மனிதர்கள் கடைசிவரையிலும் உண்மையாக ஊழியம் செய்தார்கள். நிச்சயமாக அதே தேவ ஆவியானவர் நமக்குள் இருக்கின்ற வரையில் உண்மையாக ஊழியம் செய்ய அவருடைய பிள்ரைளகளால் முடியும்.

கிறிஸ்தவ ஊழிய கலாச்சாரம் தலைகீழாக மாறிவருகின்ற இன்றைய சூழ்நிலையில், மனைவியை பிரசவத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பிற வாலிப பெண்களை கர்ப்பவதிகளாக்குகின்ற பாஸ்டர்கள் பெருகிவிட்டனர். சபைக்கு மற்றும் கூட்டங்களுக்கு வருகின்ற பெண்களிடம் பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள் தவறாக நடக்கின்ற சம்பவங்கள் பெருகிக்கொண்டு இருக்கிறது. பல பெண்களை தங்களுக்கு கீப்பாக வை;திருக்கின்ற பாஸ்டர்கள் பெருகிவிட்டனர். சபைக்கு வருகின்ற வாலிபர்களையும் பணம்படைத்த ஆண்களையும் வளைத்துபோடுகின்ற பாஸ்டர்களுடைய மனைவிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றனர். பல ஆண்களோடு சுற்றித்திரிகின்ற பெண்பிள்ளைகள் ஊழியக்கார்களுடைய குடும்பங்களில் பெருகிவிட்டனர். ஒருபுறம் துதி ஆராதனை நடத்துவது அதே நேரம் சபைக்கு வருகின்ற வாலிப பிள்ளைகளை விபசார காரியங்களுக்கு தள்ளிக்கொண்டு போகின்ற பாஸ்டர்களுடைய மகன்களும் பெருகிவிட்டனர். இப்படிப்பட்டவர்களால் கிறிஸ்தவ சமுதாயமே தலைகுனிந்து நிற்பதோடுமட்டுமல்லாமல் இன்றைக்கு பலவித வாதைகளையும் சாபங்களையும் வாங்கி கட்டிக்கொண்டு தவித்துக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சாபங்களால் கிறிஸ்தவ சமுதாயமும் இன்றைய கிறிஸ்தவ வாலிபர்களும் விபசாரம் வேசித்தனம் மற்றும் டைவர்ஸ் போன்ற வாதைகளால் பாதிக்கப்படுகின்றது.

ஆனால் இன்றைக்கு துணிகரமாக விபசாரம் சொய்துகொண்டே ஊழியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பல அட்டூழியர்கள் தாங்கள் செய்கின்ற விபசார காரியங்களை நியாயப்படுத்தி தங்களை வெளியில் நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். 

எல்லோரும் நீதிமான்களா? தேவன் ஒருவர் தவிர ஒருவரும் நீதிமானல்லவே.

ஊழியக்காரர்களும் மனிதர்கள்தானே. அதனால் அவர்களும் தவறு செய்வது சகஜம்தானே.


என்றெல்லாம் சொல்லி தாங்கள் செய்கின்ற தவறுகளை நியாயப்படுத்துகின்றனர். இன்னொருபுறம்  இந்த காரியங்கள் வெளியில் தெரிந்தால்

ஊழியங்கள் பெயர் கெட்டுப்போய்விடும்

நம்முடைய சபைக்குதான் கெட்ட பெயர் ஏற்படும்

இதனால் கிறிஸ்தவர்களுக்குதான் கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடும்

புறஜாதியினர் இரட்சிக்கப்படமாட்டார்கள்

புதிதாக மனம்திரும்பியவர்கள் பின்வாங்கிப்போவார்கள்

ஊழியங்களுக்காக வருகின்ற காணிக்கையும் குறைந்துபோய்விடும்

உண்மையான ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள்


என்றெல்லாம் சொல்லி விசுவாசிகளையே நயவஞ்சகமாக நம்பவைத்து தாங்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள்.  இவர்களில் பலர் மற்றவர்களை பயமுறுத்தியே தங்களுடைய அட்டூழியங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தங்களுடைய அட்டூழியங்களை நியாயப்படுத்தவும் மறைக்கவும் எந்த லெவலுக்கும் செல்ல தயங்காதவர்கள்.

தேவன் அபிஷேகம் பண்ணிவரை குற்றம் சுமத்த இவர்கள் யார்? கர்த்தர் இவர்களை சும்மா விடமாட்டார் ...

பைபிளில் உள்ள சாபங்களை சொல்லி பயமுறுத்துவது ...

ஊழியக்காரன் குடும்பத்துக்கு விரோதமாக எழும்பினால் அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் அடிப்பார் ...

தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை கர்த்தர் அழிப்பதாக தரிசனம் காட்டினார் என்று சொல்லி மிரட்டுவது ...

இப்படிதான் ஒருவர் ஊழியக்காரங்களுக்கு விரோதமாக எழும்பினார் சடிதியில் அவர் அழிந்து போனார் அதனால் ஊழியக்காரருக்கு விரோதமாக எழும்பினால் இதுதான் கதி என்று கற்பனை கதைகளை சாட்சியாக சொல்லி மிரட்டுவது ...


போன்ற காரியங்களால் மற்றவர்களை பயமுறுத்தி தங்கள் காரியம் வெளியாகிவிடாமல் தடுக்க முயற்சிப்பார்கள். பலர் இந்த மிரட்டலுக்கு பயந்துபோய் தவiறுகளை கண்டிக்க மறுத்துவிடுவார்கள். ஆனால் தேவனுடைய உண்மையான பிள்ளைகளோ இந்த பூச்சாண்டிகளுக்கொல்லாம் கொஞசம்கூட பயப்படாமாட்டார்கள். தைரியமாக இந்த அட்டூழியக்காரங்களை எதிர்த்து போராடுவார்கள். கிறிஸ்தவ அவிசுவாசிகளோ இவர்கள் விடுகின்ற சாபங்களுக்கு பயந்துவிடுகிறார்கள்.

இந்த அட்டூழியக்காரர்கள் எப்படிப்பட்ட பெண்களை வசியம் செய்கிறார்கள் என்றால்.

திக்கற்ற பெண்கள்

விதவைகள்

கணவனால் கைவிடப்பட்டவர்கள்

கணவர்கள் வெளி நாடுகளில் வேலை செய்கின்றவர்கள்.

விழுந்துபோன உடன் பெண் ஊழியர்கள்

பணத்திற்காகவும் புகழுக்காகவும் எதையும் செய்யத்தயங்காத பெண்கள்
பதவிகளையும் புகளையும் விரும்புகிற ஊழியர்கள் வீண் பெருமை கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர். பண ஆசை உள்ள ஊழியர்கள் காணிக்கை பணத்தை தங்களுக்காக எடுத்துக்கொண்டு ஊழிய சொத்துக்களை அபகரித்து அவைகளையெல்லாம் தங்களுக்காக ஆக்கிக்கொண்டவர்கள் அசுத்த ஆவிக்கு இடம் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில்; அசுத்த ஆவி இப்படிப்பட்ட நபர்களை தங்களுடைய கன்ட்Nhரலுக்குள் எடுத்துக்கொள்கின்றது. பின்னர் இவர்களை விபசார பாவங்களிலும் தள்ளிவிடுகின்றது. அதன் பின்னர் விழுந்துபோன இந்த ஊழியர்கள், எதற்கும் பயப்படாமல் துணிகரமாக விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்பெண்களை மட்டுமல்லாமல் சிறுவர்களையும் வாலிப பையன்களையும்கூட தங்களுடைய இச்சைகளை தீர்க்க பாலியல் காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள்.

பாவம், இப்படிப்பட்ட விபசார அட்டூழியர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கின்ற பெண்கள் படுகின்ற வேதனைகள் அதிகமதிகம்.

வாலிப பெண்களை திருமணமாகாமலேயே கர்த்தர் ஊழியத்துக்கு அழைக்கிறார் என்று தரிசனம் சொல்லி விபசாரத்தில் தள்ளி தங்களுடைய இச்சைகளை தீர்த்துக்கொள்வது

திருமணம் நிச்சயிக்கப்பட்டால் எப்படியாவது அதை தடுத்து நிறுத்தி விட்டு தன் இச்சைகளுக்காக அவர்களை வைத்துக்கொள்வது

திருமணம் நடந்துவிட்டால் எப்படியாவது கணவனிடமிருந்து பிரித்து டைவர்ஸ் வாங்க வைத்துவிடுவது மீண்டும் தனக்கே அவர்களை எடுத்துக்கொள்வது

பெற்றோர்களிடமிருந்து பெண்பிள்ளைகளை பிரித்து விட்டு தனக்காக அவர்களை வசியம் செய்து வைத்துக்கொள்வது

உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் பெண்களை தனிப்பைபடுத்தி பிரித்து விடுவதுமொட்டை கடிதங்கள் எழுதி அந்த பெண்களின் பெயரை கெடுத்து சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுவது

இவர்களை மிரட்டியே தேவைப்படும்போதெல்லாம் தங்களுi;டய இச்சைகளை தீர்த்துக்கொள்வது.

இவர்களை போன்ற ஊழியம் என்டற பெயரில் அட்டூழியங்கள் செய்துகொண்டிருக்கின்ற நண்பர்களுக்கெல்லாம் இந்த பெண்களை விருந்தாக்குவது

இந்த பெண்களின் பிள்ளைகள் பெரியவர்களாகும்போது மகன்களை பிரித்துவிட்டு மகள்களையும் தங்களுக்கு எடுத்துக்கொள்வது

வாழ்நாளெல்லாம தாயையும் மகளையும் தனக்கு அடிமைகளாகவே தங்கள் இச்சைகளை தீர்ப்பதற்காக வைத்திருப்பது


இந்த அட்டூழியர்கள் விபசாரத்தில் கையும் களவுமாக மாட்டிக்கொள்ளும்போது

பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி போடுகிறார்கள்.

இந்த காரியங்களை கண்டிக்கின்ற நபர்கள் மீது பழி போடுவார்கள்

உண்மையாக நடக்கின்ற உடன் ஊழியர்களை மிரட்டுகிறார்கள்
தன்னைப்பறிறி வெளியே தெரிந்தால் பிறர் நம்பமாட்டார்கள் என்றும் பாதிக்கப்படுகின்ற பெண்களையே கேவலப்படுத்துவதாகவும் மிரட்டுவார்கள். இவர்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியில் சொல்ல பயப்படுவதை இவர்டகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கின்றனர்.

உண்மையான நல்ல ஊழியர்கள்கூட ஏன் விழுந்துபோகிறார்கள்?

தனியாக அதிகமாக கவுன்சிலிங் பண்ணுகிறவர்கள் தங்கள் மனைவியோடு செல்லாமல் பெண்களுக்கு தனியாக கவுன்சிலிங் பண்ண செல்கின்றவர்கள்

தனியாக ஊழியம் செய்கின்றவர்கள்

திருமணம் ஆகாமல் ஊழியம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய மாமச இச்சைகளை கட்டுப்படுத்த முடியாதவர்களும் ஒரு கட்டத்தில் விபசாரத்தில் விழுந்தே போகிறார்கள். பின்னர் சன்யாசி வேஷம்போட்டு திரிகின்றனர்.


ஒருமுறை தவறு செய்துவிட்டால் பின்னர் துணிகரமாக விபசாரகாரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படிப்பட்ட விபசார ஊழியர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

1. பெண்களைக்கண்டாலே தனக்குப்பிடிப்பதில்லை என்று நடிக்கிறவர்கள்

2. தேவையில்லாமல் பெண்களை அளவுக்கதிகமாக புகழுகிறவர்கள்

3. பெண்களிடத்தில் அதிகமாக வழிபவர்கள்

4. பெண்களை தனியாக ஜெபிக்க வருவதற்கு அழைப்பவர்கள்

5. ஆபாச படங்களை பார்க்கிறவர்கள்

6. ஜெபிக்க வருகின்ற பெண்களிடம் ஆபாச படங்களை காட்டுகிறவர்கள்

7. ஜெபிக்கிறேன் என்று சொல்லி தவறான இடங்களில் தொடுகிறவர்கள்


இப்படிப்பட்ட அட்டூழியர்களை விசுவாசிகள்தான் அடையாளம் கண்டுகொண்டு தங்களுடைய பிள்ளைகளையும் எச்சரிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தில் முன்னணி தீர்க்கதரிசகள் என்ற போர்வையில் சுற்றித்திரிகின்ற அட்டூழியர்களால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்கள் சொன்ன காரியங்களை கேட்டபோது எனக்கு கண்ணீர் வந்தது. சர்வ வல்லமையுள்ள தேவன் இப்படிபட்டவர்களை நியாயம் விசாரி;க்கமாட்டாரா என்று தனிமையில் கதறி அழுதேன். இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளான அட்டூழியர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறவர்கள் இன்றைக்கு இவர்களை அரசியல் பலத்தினால் சட்டத்தில் அகப்படாமல் காப்பாற்றலாம். ஆனால் தேவனோ சர்வலோகத்தின் நியாயாதிபதி நிச்சயமாக இவர்களை தப்பவிடவேமாட்டார்.

பிரியமானவர்களே, இப்படிப்பட்ட கள்ள ஊழியர்கள் மூலமாக விசுவாச துரோகங்கள் பெருகிவிட்ட இந்த நாட்களில் விசுவாசிகளாதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்டிப்பட்டவர்களைவிட்டு விலக வேண்டும். இந்த அட்டூழியர்களோடு விபசாரத்தில் ஈடுபடுவதால் அனேக வரங்கள் கிடைக்குமென்று ஏமாற்றிக்கொண்டு திரிகின்ற நய வஞ்சக ஏஜெண்டுகளான பெண்களிடமிருந்தும் தப்ப வேண்டும். சிறுவர்களும் வாலிப பிள்ளைகளும் மற்ற பெண்களும் வஞ்சிக்கப்படாமலிருக்க இந்த மாதிரியான நபர்களை, தேவனுடைய உண்மையான பிள்ளைகள் தைரியமாக சமுதாயத்தில் அடையாளம் காட்ட வேண்டும்.

அன்புடன்,
ஜி. பொன்னுத்துரை ஜோஸப்

No comments:

Post a Comment