Sunday 23 October 2011

பொல்லாத மேய்ப்பர்களுக்கு (அட்டூழியக்காரர்களுக்கு) ஐயோ! - பொல்லாத பாஸ்டர்களுக்கு ஆபத்து!


பொல்லாத மேய்ப்பர்களுக்கு (அட்டூழியக்காரர்களுக்கு) ஐயோ! - பொல்லாத பாஸ்டர்களுக்கு ஆபத்து!




எசே 34:2 மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ...

தங்களையே மேய்க்கிற அட்டூழியக்காரர்களுக்கு ஐயோ

எசே 34:2-4 ... கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார், தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையைமேய்க்கவேண்டும். நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள், கொழுத்ததை அடிக்கிறீர்கள், மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.  நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.


ஆடுகளைப் பராமரியாமல், சிதறடித்து துரத்திவி;டுகிற அட்டூழியக்காரர்களுக்கு ஐயோ!  

எரே 23:1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரே 23:2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டீர்கள், இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சக 11:17 மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும். அவன் புயமுழுவதும் சூம்பிப்போம். அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ

மத் 23:16 குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, ... 

மத் 23:17 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 

மத் 23:24 குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். 

மத் 23:26 குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 

மாயக்காரராகிய அட்டூழியக்காரர்களுக்கு ஐயோ

மத் 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.

மத் 23:14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள், இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

மத் 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 

மத் 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷpத்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. 

மத் 23:25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

மத் 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். 

மத் 23:28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

லூக் 11:42 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

லூக் 11:43 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.

லூக் 11:44 மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார். 

அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்ட அட்டூழியக்காரர்களுக்கு ஐயோ

லூக் 11:52 நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். 

லூக் 11:46 அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள், நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

கூலிக்காக வஞ்சகம் செய்க்கிற அட்டூழியக்காரர்களுக்கு ஐயோ

யூதா 1:11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

யூதா 1:12-13 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக்கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள், இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள், இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

சுவிசேஷத்தை பிரசங்கியாத ஊழியக்காரர்களுக்கு ஐயோ

1கொரி 9:16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை, அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது, சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

அன்புடன்
ஜி.பொன்னுத்துரை ஜோஸ

Monday 17 October 2011

இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்

இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்


இத்ரதோளம் யேகோவா சகாயுச்சு இத்ரதோளம் தெய்வம் என்னே நடத்தி பாடல்
ithratholam yehova sahayuchu ithrathoolam theivam enne nadathi malayalam song

செயற்கை ஒளி


செயற்கை ஒளி

தமிழ்முரசு 5/29/2008 மகரவிளக்கு செயற்கையே..
சபரிமலை தந்திரி விளக்கம்...
Magara Vilakku is artificial made light. Sabarimalai priest says.




யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் 9:5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 12:46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

ஆதாரம் நீர் தான் ஐயா பாடல்

Friday, September 28, 2007

அசைக்கப்படும் தேசங்கள்

அசைக்கப்படும் தேசங்கள்

ஆகாய்:2:6-ல் தேவன் சொல்லும் போது “இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.” என்கிறார். ”சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்” என செல்கிறது அந்த அத்தியாயம். சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் (இயேசு கிறிஸ்து) வருமுன் எல்லாமே அசைக்கப்படும் என்பது இங்கே நமக்கு உறுதியாகின்றது. அதற்கேற்ப இன்றைக்கு செய்திதாள்களை பார்த்தால் பல தேசங்களும் அசைக்கப்படுவது நமக்கு தெரியவரும்.அசைக்கவே முடியாதது என நினைத்திருந்த பல பெரிய நாடுகளின் பொருளாதாரங்களில் மிகப்பெரிய அதிர்வுகள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடன்களில் தத்தளிக்கின்றன.யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை.யாராவது இதற்கொரு தீர்வு கொண்டுவரமாட்டார்களா என எல்லா தலைவர்களுமே ஏங்குகின்றனர். தங்கத்தின் விலை விண்ணை தாண்டி சென்று கொண்டிருப்பது நம் எல்லாருக்குமே தெரியும். அப்படியே ஆவிக்குரியவர்கள் மத்தியிலும் வெளியே சொல்ல முடியாதபடி கீறல்விழும் அளவுக்கு பெரிய அதிர்வுகள். எல்லாமே வெளிவேஷம்,மாய்மாலம்.

கூடவே பல தேசங்களும் பூமி அதிர்வுக்குள்ளாகின்றன.தமிழகம் ஒருகாலமும் பார்த்திராத நிலநடுக்கங்கள் இப்போது சகஜமாகியிருக்கின்றது.இன்றைக்கு அபூர்வமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகரம் வாசிங்டன் முதல் நியூயார்க் நகரம் வரை இந்த அதிர்வை உணர்ந்திருக்கின்றன.


வாழ்நாட்களில் ஒரு நாள்கூட பூமிஅதிர்ச்சியை பார்த்திராத வயதான பெரியவர்களெல்லாம் இப்போது பூமிஅதிர்ச்சியை பார்க்கிறார்கள் உணர்கிறார்கள்.கேட்டால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஒன்றும் கூடவில்லை.நிலநடுக்கத்தை பதிவுசெய்யும் தொழில்நுட்பங்கள் தான் அதிகரித்திருக்கின்றன.இதனால் தான் நமக்கு பூமிஅதிர்ச்சிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது போல தோன்றுகிறதுவென சப்பை கட்டு கட்டுவார்கள். வாழ்க அவர்களும் அவர்கள் விஞ்ஞானமும்.இன்னும் எவ்வளவு காலம் தான் கண்ணைமூடி வைத்துக்கொண்டே இருட்டாய் இருக்கிறதுவென சொல்லி சம்மாளிப்பார்களோ தெரியவில்லை. இந்த அசைவுகளும் அதிர்வுகளும் தூங்கிக்கொண்டிருக்கும் மற்றும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் நம்மில் பல பேர்களை எழுப்பத்தான் என்பதை நம்மில் யார் அறிவார். காலத்தை அறிந்தவர்களாய் நாம் நித்திரையைவிட்டு எழும்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
ரோமர் 13:11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது

Friday 14 October 2011

நண்பா உண் வாழ்கையை தொலைத்து விடாதே

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

லாசருவைக் குறித்து ஏழு காரியங்கள்

Lazarus
(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2)
(2) மரித்த லாசரு (யோ.11:14-15)
(3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட லாசரு (யோ.11:44)
(4) கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டு, நாலு நாளாய் நாறிக்கொண்டிருந்த லாசரு (யோ.11:17,39)
(5) இயேசுவின் அழைப்பின் சத்தம் கேட்டு (லாசருவே வெளியே வா)  உயிர்த்தெழுந்த லாசரு (யோ..11:43)
(6) கட்டுகளிலிருந்து விடுதலையடைந்து உயிருள்ள சாட்சியாய் ஜீவித்த லாசரு (யோ.11:45,  12:10-11)
(7) இயேசுவோடு விருந்து சாப்பிட்ட லாசரு (யோ.12:2 ,  வெளி 3:20-21,27)

நீதிமொழிகளில் 12 விதமான மனுஷர்கள்

நீதிமொழிகளில் 12 விதமான மனுஷர்கள்

(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13)
(2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23)
(3) நல்ல மனிதன் (நீதி.14:14)
(4) உண்மையான மனிதன் (நீதி.20:6)
(5) தயையுள்ள மனுஷன் (நீதி.11:17)
(6) புத்தியும் அறிவுமுள்ள மனுஷன் (நீதி.28:2)
(7) ஒரு கன்னிகையை நாடிய மனுஷன் (நீதி.30:19)
(8) பேலியாளின் மனுஷன் (நீதி.6:12)
(9) துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷன் (நீதி.12:2)
(10) மதியற்ற மனுஷன் (நீதி.15:20)
(11) உக்கிரமுள்ள மனுஷன் (நீதி.22:24)
(12) பொல்லாத மனுஷன் (நீதி.24:1)

Wednesday 12 October 2011

ஆவியானவர் வந்தால்

ஆவியானவர் வந்தால் ஆவியானவர் வந்தால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரிமா?

 தேவ ஜனமே  என்ன நடக்கிறது தெரிமா?

என்ன நடக்கும்

ஆவியானவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்தவர்கள் எதனை போதகர்கள்?

என்ன நடக்கிறது?

ஆர்பரிப்பு பாடல் இருந்தால் மட்டுமா ஆவியானவர் வருவாரா?
சுகமளிக மட்டும் தான் வருவாரா ?
முக்கியமாக ஆசீர்வாதம் தர தான் வருவாரா?
இல்லை என்றால் உன்னை கீழே தள்ள தான் வருவாரா ?
என்ன நடக்கிறது?
வாலிபனே நிஐம் தேடி அவியனவருடன் வேதம் காட்டும் வெளிததில் நட நண்பா.

ஆட்டம் பட்டம் ஆசீர்வாதம் உல்லாசம் எல்லாம் நம்பாதே இளைஞனே!!!

ஆட்டம் பட்டம் எல்லாம் என் அப்பா விட்டில் உண்டு ஆணால் அது பிரதானம் அல்ல அல்ல அல்ல...

இளைஞனே!!!
திடப்படுத்தலுக்குப்பின் நீ பலவீனப்படுத்தபடுவது எனக்கு தெரியும்..!!! இராப்போஜனத்திற்க்குப் பின் நீ இரத்த சோகையடைவதும் எனக்கு புரியும்! கிறிஸ்மஸ் வந்தால் சிரிப்பதற்க்கும், லெந்து காலங்களில் அழுவதற்கு மட்டுமே உன்னை ஆயத்தப்படுத்துவார்கள்! தேதி குறித்து உணர்ச்சிகளை உந்திவிட, நீ ஒன்றும் நடிகனல்லவே? பேசிவிடுவாயே என பிரசங்கத் தொட்டிலில் தாலாட்டுவார்கள்; ஏசிவிடுவாயே என பாடகர் குழுவிற்காகபயிற்ச்சியளிப்பார்கள்! அத்தனையும் ஏற்று நீ ஆயத்தமானாலும் உனது உரிமை, ஒப்பாரிவைக்கும் பொழுது ஒதுங்கியே இருப்பார்கள்!! இரு!! இரண்டு கைகளாலும் உன்னை ஆசீர்வதித்துவிட்டு மூன்றாவது கையாக ஒரு உண்டியலையும் நீட்டுவார்கள்! இதைவிட ஒரு பிச்சைகாரனுக்கு நீ பிச்சையிட்டு நீ பெருமிதப்படலாமே!! உண்மையிது! உண்டியல்களின் உள்ளங்கைகளைவிட தொழுநோயாளிகளின் கைகள் தூய்மையானவை! பலமானவனே!! இயேசுவின் பிறப்பின்போது பளபளப்புகளை கண்டு பரவசப்படாதே! கந்தலின் மீதே உன் கவனம் இருக்கட்டும்! அவரது இறப்பின்போது தண்ணீர்ப் பந்தல்களில் தவமிருக்காதே!! கட்டாயச் சோகத்தை கழற்றி எறிந்துவிட்டு அது, உயிர்தெழுதலுக்கான உத்தியென்பதில் உன்னிப்பாக இரு! உன் சுட்டு விரலுக்குள் சூரியன் இருக்கிறது...அதை நீ திருப்பும் திசையெல்லாம் வெளிச்சம் அடிக்குமென விளங்கிக் கொண்டால் போதும்!!!

--jesus--

Tuesday 11 October 2011

ஆவியானவர் சொன்னார், ஆவியானவர் சொன்னார்.....

ஆவியானவர் சொன்னார்,ஆவியானவர் சொன்னார். என்று சொல்லும் ஒரு சில போதகர்களை நம்ப முடிமா ..

அவர்களிடம் மட்டும் சொன்னார் என்றால் . வேதம் அவியனவரால் எழுதபடவில்லையா ?

வேதம் தரும் வெளிச்சதில் நட....
நாசியில் சுசம் உள்ள மனிதனை  நம்பாதே நண்பா ....

இவர்கள் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாக வரம் பெற்றவர்களாக, தங்களை வர்ணனை செய்துகொண்டு இன்டர்நேஷனல் ஸ்பீக்கர் எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மக்களை வஞ்சிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊழிய திட்டமும் கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என பொய் சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்பவர்கள் இவர்கள் தங்கள் ஊழிய வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என திறந்த மனதுடன் கணக்கை வெளியிடமுடியுமா?
வெளிச்சத்தில் இல்லாத எல்லாம் இருளில் உள்ளது ..இருள் யாருடையது ..
தங்களைப் பெரிய தீர்க்கதரிசியாகவும், தேவ வரம் பெற்றவர்களாகவும், தங்கள் பத்திரிக்கையில் தங்களைப்பற்றி சித்தரிப்போர் தங்கள் சொத்துக் கணக்கை அவர்களின் பத்திரிக்கையிலேயே குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வெளியிடமுடியுமா?
இந்த சிறியவரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என இயேசுகிறிஸ்து கூறினார். ஐம்பது லட்சம் ரூபாய் காரில் வலம் வருகிறவர்கள் சிறியவர்களா?
இவர்கள் ஆடம்பரமாக இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், உலக உல்லாசத்தை அனுபவித்து தங்களை பெரிய தியாகிகள்போல் காட்டிக்கொள்பவன் இவர்களே. ஓநாய்கள், கனியற்றவர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள் இவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி செய்தாலும், காணிக்கை அனுப்பினாலும் அது இயேசுவை சந்தோஷம் படுத்தாது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. . . . . அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அவர்கள் உலகத்துக்குரியவர்கள். உலக்தக்குரியவைகளைப் பேசுகிறார்கள். (யோவான் 4:1-5).
தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யக்கூடாது. அதாவது இருவரையும் ஒரே நேரத்தில் சேவிக்கமுடியாது என்று இயேசு தமது சீடர்களிடம் கூறினார்.

இயேசுகிறிஸ்து கொடுக்கிற பாவமன்னிப்பு, பரிசுத்த வாழ்வு, பரலோக வழி இவைகளைவிட அவர் தரும் உலக ஆசீர்வாதங்களைமட்டும் இன்றைய ஊழியர் பலர் பிரசங்கிக்கிறார்கள். மாமிசத்தில் வந்த இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தார். இரட்சிப்பு பெறாத ஒரு மனிதன் தெய்வீக சுகமோ, உலகப்பிரகாரமான ஆசீர்வாதமோ பெற்று என்ன பயன்? பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? (பிர 8:12). நோவாவின் காலத்தில நடந்ததுபோலவே மனுஷகுமாரன் காலத்திலும் நடக்கும். நோவாவின் காலத்தில் மனுஷர் பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள், புசித்தார்கள், குடித்தார்கள். ஆனால் பாவ உணர்வு அற்றவர்களாக, தேவ தீர்ப்பை உணராதவர்களாகவே வாழ்ந்தார்கள். அதாவது உலகப் பிரகாரமான வாழ்வு வாழ்ந்தார்கள். ஆவிக்குரிய வாழ்வில் தரித்தரர்களாய் இருந்தனர். இந்த உலகமும், அதின் ஆசீர்வாதங்களும் தற்காலிகமானவை. நித்திய வாழ்வுக்குரிய இரட்சிப்பைப் பெறாதவன். இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினவனாக இருந்தும் தனது ஜீவனை, ஆத்துமாவை நஷ்டப்படத்தினவனாவான். எனவே எந்த ஊழியருடைய செய்தியில், எழுத்துக்களில் நித்திய ரட்சிப்பு தரும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இடம்பெறவில்லையோ அல்லது உலக ஆசீர்வாதம் மட்டுமே பேசப்படுகிறதோ அந்த ஊழியத்தை நீங்கள் சந்தேகப்படவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். அற்புத அடையாளங்களைவிட இரட்சிப்பே பெரியது. இரட்சிப்பைக்குறித்து முக்கியப்படுத்தவே அற்புதங்கள். இன்றைய பல ஊழியங்களில் இரட்சிப்புக்கு வழி நடத்தாத அற்புதங்கள் ஏராளம். இரட்சிப்பைவிட அற்புதங்களே முக்கியப்படுத்தப் படுகின்றன. யோவான் ஸ்நானகன் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவைக்குறித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை.
உணர்ந்து கொள் தேவ  ஜனமே
உணர்ந்து கொள் தேவ  ஜனமே
உணர்ந்து கொள் தேவ  ஜனமே

Monday 10 October 2011

ஆவியானவர் படும்பாடு

 1) அக்கினி,
2) அந்நியபாஷை.

இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கிரமம் சொல்லி முடியாதது.
முதலாவது சபையை பற்றி பார்போம்


சபை சரித்திரத்தின் பிரிவுகள்


சபை சரித்திரத்தை ஆறுபிரிவுகளாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளார்கள். அதையும் அறிந்துகொள்வது நல்லது.

1. APOSTOLIC CHURCH
அப்போஸ்தலர்களின் கால சபை: கி.பி.30-100 இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பிறகு இயேசுகிறிஸ்து பரலோகத்திற்கு பரமேறி சென்ற காலத்திலிருந்து - இயேசுவின் சீஷனாகிய அப்போஸ்தலனாகிய யோவானின் மரணம்வரை உள்ள காலம்.

2. PERSECUTED CHURCH

உபத்திரவங்களை அனுபவித்த ஆரம்ப சபைகளின் உபத்திரவ காலம் (கி.பி.100-313) அதை தொடர்ந்து அப்போஸ்தலன் யோவான் மரித்தகாலம் தொடங்கி கான்ஸ்டன்டைன் இராஜா கிறிஸ்தவ சபையின் பொறுப்பெடுத்த காலம்வரை உண்டான கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட பயங்கர உபத்திரவ காலகட்டங்கள்.

3. IMPERIAL CHURCH
இராஜாக்களின் தலைமையில் இயங்கப்பட்ட சபைகளின் காலம் கி.பி.314-476 தொடங்கி சபைகளின்மேல் ரோமாபுரியின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தகாலம் வரை உள்ள வரலாறு.

4. MEDIEVEL CHURCH
இடைப்பட்ட சபை காலவரலாறு: கி.பி.476-1453 ரோமாபுரியின் ஆதிக்கத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கி - கான்ஸ்டன்டைன் டிநோபுளும் வீழ்ச்சியுற்றதின் இடைப்பட்ட கால வரலாறு.
5. REFORMED CHURCH
சபைகள் மறுமலர்ச்சி பெற்ற காலம்: கி.பி.1453-1648வரை அதாவது கான்டன்டைன் டிநோபாளின் அரசாட்சி வீழ்ச்சியடைந்த காலத்திலிருந்து அதை தொடர்ந்து நடந்த பயங்கரபோர்முடிய சுமார் 30 வருடங்களானது. அந்த காலங்களில் நடந்த வரலாறு.
6. MODERN CHURCH
நவீன கால சபைகள் கி.பி.1648-1900 வரை அதாவது நடந்துமுடிந்த 30 ஆண்டுகால யுத்தத்திற்கு 19ம் நூற்றூண்டு காலம்வரை உள்ள வரலாறு என்று பிரித்து அதன்பின் ஒவ்வொரு இடைப்பட்ட காலங்களில் சம்பவித்த விஷயங்கள் சபை உபதேசங்களை திருத்திய வரலாறுகள் இவைகளை குறித்த ஆராய்ச்சிகளை ஒன்று சேர்த்துதான் 6 பிரிவுகளாக வேத ஆய்வாளர்கள் பிரித்தனர்.

அந்நியபாஷை குழப்பம் தொடங்கிய வரலாறு

Cross  அந்நியபாஷை என்பது உண்டு. அந்த உண்மையான அந்நிபாஷையை புதிய ஏற்பாட்டு சபைமக்கள் எல்லாரும் பேசும்போது அதைக்கூட பரி.பவுல் அப்போஸ்தலன் கீழ்கண்டவாறு விமர்சிக்கிறார். 1கொரி 14:23 "சபையாரெல்லாரும் ஏகமாய்க்கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது (சபைக்குள்ளே) பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என்று கூறி கண்டிக்கிறார்.

Cross     பொய்யான அந்நியபாஷை என்ற உபதேசத்தின் இவர்கள் இயேசுவை அறியாத மக்களைக்குறித்தோ, மிக தொலைவில் மலைகளில், காடுகளில் உள்ள ஆதிவாசி மக்களைக்குறித்தோ இவர்களுக்கு தரிசனம் இல்லை. சுலபவழியாக கிறிஸ்தவர்களை - மறுபடியும் கிறிஸ்தவர்களாக்கும் ஊழியத்தையே இப்போதும் தொடர்கின்றனர்.

Cross   அதை தொடர்ந்து  சபைகளில் தீர்க்கதரிசனமும், அற்புதசுகமும் பிரபலமாயின.




அடிப்படை வேதஅறிவு இல்லாத  சபை பாஸ்டர்களின் எண்ணிக்கைதான் இப்போது மிக மிக அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் நடத்தும் சபைகளில் உள்ள மக்களின் நிலையை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.
பொதுவாக இப்படிப்பட்ட  சபைகள் நாங்கள்தான் மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் என்றும் தங்களைத்தான் ஆவிக்குரிய சபைகள் என்பார்கள் என்றெல்லாம் கூறிக்கொள்வார்கள். மற்ற ஸ்தாபன சபைகளை (MAIN LINE CHURCH) பெயர் கிறிஸ்தவசபைகள் என்று இவர்கள் அழைப்பார்கள்.   ஆனால் உயிர்மீட்சி ஆரம்பத்தில் பெந்தேகோஸ்தேசபை பிரசங்கிமார்களால் உண்டாகவில்லை என்பதை இவர்கள் உணரவில்லை.         ஸ்தாபன சபைகளிலிருந்து கன்வென்ஷனில் பேச அழைக்கப்பட்ட பிரசங்கிமார்கள் மூலமாகத்தான் உயிர்மீட்சி உண்டானது என்பதை இவர்கள் மறந்துப்போனார்கள்.   இவர்கள் கைகளில் வைத்துள்ள வேதபுத்தகத்தை மொழிபெயர்த்து கொடுத்த மிஷனரிகள் யாரும் அந்நியபாஷை பேசாதவர்கள் என்பதையும் இவர்கள் மறந்தார்கள். சுவிசேஷத்தை ஆரம்ப விதைகளாக தெளித்து இரத்த சாட்சிகளாக மரித்த ஒரு மிஷனரிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையம் குறிப்பிடவிரும்புகிறேன்.

 சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கர்த்தரை மகிழச்செய்வோம்.   நமக்குள் என்ன ஆவி உண்டொன்று நம் செயல்கள், கனிகள் கூறட்டும். நிச்சயம் அதன்மூலம் மட்டுமே தேவநாமம் மகிமைப்படும். பக்திவிருத்தியும் உண்டாகும