Tuesday 11 October 2011

ஆவியானவர் சொன்னார், ஆவியானவர் சொன்னார்.....

ஆவியானவர் சொன்னார்,ஆவியானவர் சொன்னார். என்று சொல்லும் ஒரு சில போதகர்களை நம்ப முடிமா ..

அவர்களிடம் மட்டும் சொன்னார் என்றால் . வேதம் அவியனவரால் எழுதபடவில்லையா ?

வேதம் தரும் வெளிச்சதில் நட....
நாசியில் சுசம் உள்ள மனிதனை  நம்பாதே நண்பா ....

இவர்கள் தேவ வெளிப்பாடு பெற்றவர்களாக வரம் பெற்றவர்களாக, தங்களை வர்ணனை செய்துகொண்டு இன்டர்நேஷனல் ஸ்பீக்கர் எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மக்களை வஞ்சிக்கிறார்கள்.
ஒவ்வொரு ஊழிய திட்டமும் கர்த்தர் சொன்னார், கர்த்தர் சொன்னார் என பொய் சொல்லி மக்களிடம் பணம் வசூல் செய்பவர்கள் இவர்கள் தங்கள் ஊழிய வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என திறந்த மனதுடன் கணக்கை வெளியிடமுடியுமா?
வெளிச்சத்தில் இல்லாத எல்லாம் இருளில் உள்ளது ..இருள் யாருடையது ..
தங்களைப் பெரிய தீர்க்கதரிசியாகவும், தேவ வரம் பெற்றவர்களாகவும், தங்கள் பத்திரிக்கையில் தங்களைப்பற்றி சித்தரிப்போர் தங்கள் சொத்துக் கணக்கை அவர்களின் பத்திரிக்கையிலேயே குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வெளியிடமுடியுமா?
இந்த சிறியவரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என இயேசுகிறிஸ்து கூறினார். ஐம்பது லட்சம் ரூபாய் காரில் வலம் வருகிறவர்கள் சிறியவர்களா?
இவர்கள் ஆடம்பரமாக இரட்டை வாழ்க்கை வாழ்பவர்கள், உலக உல்லாசத்தை அனுபவித்து தங்களை பெரிய தியாகிகள்போல் காட்டிக்கொள்பவன் இவர்களே. ஓநாய்கள், கனியற்றவர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள் இவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். இவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி செய்தாலும், காணிக்கை அனுப்பினாலும் அது இயேசுவை சந்தோஷம் படுத்தாது.
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. . . . . அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. அவர்கள் உலகத்துக்குரியவர்கள். உலக்தக்குரியவைகளைப் பேசுகிறார்கள். (யோவான் 4:1-5).
தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யக்கூடாது. அதாவது இருவரையும் ஒரே நேரத்தில் சேவிக்கமுடியாது என்று இயேசு தமது சீடர்களிடம் கூறினார்.

இயேசுகிறிஸ்து கொடுக்கிற பாவமன்னிப்பு, பரிசுத்த வாழ்வு, பரலோக வழி இவைகளைவிட அவர் தரும் உலக ஆசீர்வாதங்களைமட்டும் இன்றைய ஊழியர் பலர் பிரசங்கிக்கிறார்கள். மாமிசத்தில் வந்த இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தார். இரட்சிப்பு பெறாத ஒரு மனிதன் தெய்வீக சுகமோ, உலகப்பிரகாரமான ஆசீர்வாதமோ பெற்று என்ன பயன்? பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? (பிர 8:12). நோவாவின் காலத்தில நடந்ததுபோலவே மனுஷகுமாரன் காலத்திலும் நடக்கும். நோவாவின் காலத்தில் மனுஷர் பெண் கொண்டார்கள், பெண் கொடுத்தார்கள், புசித்தார்கள், குடித்தார்கள். ஆனால் பாவ உணர்வு அற்றவர்களாக, தேவ தீர்ப்பை உணராதவர்களாகவே வாழ்ந்தார்கள். அதாவது உலகப் பிரகாரமான வாழ்வு வாழ்ந்தார்கள். ஆவிக்குரிய வாழ்வில் தரித்தரர்களாய் இருந்தனர். இந்த உலகமும், அதின் ஆசீர்வாதங்களும் தற்காலிகமானவை. நித்திய வாழ்வுக்குரிய இரட்சிப்பைப் பெறாதவன். இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினவனாக இருந்தும் தனது ஜீவனை, ஆத்துமாவை நஷ்டப்படத்தினவனாவான். எனவே எந்த ஊழியருடைய செய்தியில், எழுத்துக்களில் நித்திய ரட்சிப்பு தரும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இடம்பெறவில்லையோ அல்லது உலக ஆசீர்வாதம் மட்டுமே பேசப்படுகிறதோ அந்த ஊழியத்தை நீங்கள் சந்தேகப்படவேண்டும்.
இயேசுகிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன். அற்புத அடையாளங்களைவிட இரட்சிப்பே பெரியது. இரட்சிப்பைக்குறித்து முக்கியப்படுத்தவே அற்புதங்கள். இன்றைய பல ஊழியங்களில் இரட்சிப்புக்கு வழி நடத்தாத அற்புதங்கள் ஏராளம். இரட்சிப்பைவிட அற்புதங்களே முக்கியப்படுத்தப் படுகின்றன. யோவான் ஸ்நானகன் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவைக்குறித்து அவன் சொன்னதெல்லாம் உண்மை.
உணர்ந்து கொள் தேவ  ஜனமே
உணர்ந்து கொள் தேவ  ஜனமே
உணர்ந்து கொள் தேவ  ஜனமே

No comments:

Post a Comment